உரை |
|
3. மகத காண்டம் |
|
6. பதுமாபதியைக் கண்டது |
|
வாயில்
புக்கபின் வைய
நிறீஇ
ஆய்வளைத் தோளி யகம்புக்
கருளென வைய
வலவன் வந்தனன்
குறுகிப்
பூண்ட பாண்டியம் பூட்டுமுதல் விட்டபின்
5 மஞ்சுவிரித் தன்ன வைய
வாயிற்
கஞ்சிகை கதுமெனக் கடுவளி
யெடுப்ப
வெண்முகிற் பிறழு மின்னென
நுடங்கித்
தன்னொளி சுடருந் தையலை யவ்வழிக் |
|
1-8 ;
வாயில்.........தையலை |
|
(பொழிப்புரை) இவ்வாறு பதுமாபதி
அநங்கன் திருக்கோயில் முன்றிலையடைதலும் அவ்வண்டிப்பாகன் வண்டியை
நிறுத்தி எதிர்வந்து அழகிய வளையணிந்த கைகளையுடைய இறைமகளே!
வண்டியினின்றும் இறங்கித் திருக்கோயிலின்கண் புகுந்தருள்க ! என்று கூறி
வண்டியில் பூட்டப்பட்ட எருதுகளின், பூட்டினைத் தெரித்துவிட்ட பின்னர்
அவ்வண்டியின்கண் வெண்முகிலை விரித்து வைத்தாற்போன்ற திரைச் சீலையைக்
காற்று ஒதுக்குதலாலே அதனகத்திருந்து வெண்முகிலினூடே பிறழாநின்ற
மின்னற்கொடிபோன்று அசைந்து தண்ணொளி பரப்பும் பதுமா பதியை
என்க. |
|
(விளக்கம்) நீறீஇ -
நிறுத்தி. தோளி - விளி. வையவலவன் - வண்டிப்பாகன்.
கஞ்சிகை-திரைச்சீலை. கதுமென- விரைவுக் குறிப்பு. மஞ்சு-முகில்.
நுடங்கி-அசைந்து. வெய்யவொளியு முண்டாகலின், தண்ணொளி என்றார்.
தையல் - பதுமாபதி. |