உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
12. பந்தடி கண்டது |
|
கருதரு முரிவொடு புருவமுங்
கண்ணும்
வரிவளைக் கையு மனமு மோட
125 அரியார் மேகலை யார்ப்பொடு
துளங்கவும்
வருமுலை துளும்பவுங் கூந்த
லவிழவும்
அரிமலர்க் கோதையொ டணிகலஞ்
சிதறவும்
இருந்தன ணின்றன ளென்பதை
யறியார்
பரந்த பஃறோள் வடிவின ளாகித்
130 திரிந்தன ளடித்துத் திறத்துளி
மறித்தும்
முரியுந் தொழிலொடு மூவாயி
ரங்கை முறையி
னேற்றிப் பந்துநிலத் திடலும்
|
|
(இதுவுமது)
123 - 132 : கருதரும்...........இடலும்
|
|
(பொழிப்புரை) நினைத்தற்கரிய நெளிவுகளுடனே புருவமும் கண்களும் வரிவரியான வளையலையணிந்த கைகளும்
நெஞ்சமும் ஓடாநிற்பவும் அழகமைந்த மேகலையணி ஆரவாரத்தோடு அசையாநிற்பவும் இளமுலைகள்
துளும்பா நிற்பவும் கூந்தல் அவிழாநிற்பவும் அழகிய மலர்மாலையோடே அணிகலன்கள்
சிதறாநிற்பவும் காண்போர் இவள் இருந்தனளோ? நின்றனளோ? என்று அறியாராகும்படி பரவிய
பற்பல கைகளை உடைய உருவம் படைத்தவள் போன்று காணப்பட்டு விரைந்து சுழன்று அடித்தும்
திறலுண்டாகத் தடுத்தும் வளையும் தொழிலோடே முறைமையாக மூவாயிரங் கையாக
அடித்துயர்த்திப் பந்தினை நிலத்திலே இடுதலும் ; என்க.
|
|
(விளக்கம்) முரிவு - நெளிவு. அரி - அழகு. வருமுலை :
வினைத்தொகை. விரைந்து சுழன்றடித்தலின் காண்போர்க்கு நான்கு திசையினும் பரவிய
பற்பல கைகளுடையாள் போன்று தோன்றினள் என்பது
கருத்து.
|