உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
12. பந்தடி கண்டது |
|
ஓடா
நடவா வொசியா வொல்காப்
பாடாப் பாணியி னீடுயிர்ப்
பினளாய்க்
கண்ணின் செயலினுங் கையின்
றொழிலினும் விண்ணவர்
காணினும் வீழ்வர்கொல் வியந்தெனப்
210 பாடகத் தரவமுஞ் சூடகத்
தோசையும் ஆடுபந்
தொலியுங் கேட்பி
னல்லதை ஐயபந்
தெழவெழ வதனுட
னெழுதலிற் கையுங்
காலு மெய்யுங் காணார்
|
|
(இதுவுமது)
206 - 213 : ஒடா...........காணார்
|
|
(பொழிப்புரை) ஓடியும் நடந்தும் ஒசிந்தும் ஒல்கியும் பாடியும் தாளத்திற்கேற்ப விடும்
உயிர்ப்பினளாய்க் கண்ணின் செயலாலும் கையின் செயலாலும் இப்பொழுது இவளைத் தேவர்கள்
காணினும் வியந்து பெரிதும் விரும்புவர் என்று கண்டோர் வியக்கவும் பாடகத்தின் ஒலியும்
சூடகத்தின் ஒலியும் ஆடா நின்ற பந்தின் ஒலியும் ஆங்குள்ளோர் செவியால் கேட்பதல்லது
அழகிய அப்பந்துகள் எழுந்தோறும் தானும் எழுதலாலே அவளுடைய கைகளையும் கால்களையும்
உடம்பினையும் காணமாட்டாராய் ; என்க.
|
|
(விளக்கம்) வீழ்வர் - விரும்புவர். பாடகம் - காலணி.
சூடகம் - கையணி. ஐய - அழகிய. மெய் -
உடம்பு.
|