உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
12. பந்தடி கண்டது முற்றிற்று. |
|
ஆழியென வுருட்டியுந் தோழியொடு
பேசியும் சாரிபல வோட்டியும் வாழியென
வாழ்த்தியும் அந்தளிர்க் கண்ணி
யவந்திகை வெல்கெனப் பைந்தொடி மாதர்
பற்பல வகையால் 245 எண்ணா யிரங்கை யேற்றின
ளேற்றலும்
|
|
(இதுவுமது)
241 - 245 : ஆழி............ஏற்றலும்
|
|
(பொழிப்புரை) பந்துகளைச் சக்கரம் போன்று சுழல வீசியும் இடையிடையே தோழிமாரோடு பேசியும் பற்பல
கதியில் பந்துகளைச் செலுத்தியும் அழகிய தளிர்மாலையணிந்த அவந்திகையாகிய
எம்பெருமாட்டி வெல்க ! என்றும் ''வாழ்க!'' என வாழ்த்தியும் பசிய தொடியணிந்த
அம்மானனீகை இவ்வாறு பற்பல முறைகளாலே இடையறவின்றி எண்ணாயிரங் கையாக ஏற்றினள்.
அங்ஙனம் ஏற்றியபொழுது ; என்க.
|
|
(விளக்கம்) ஆழி - சக்கரம். சாரி - கதி. எம்பெருமாட்டி
வாழி என வாழ்த்தியும் என்க. அவந்திகை : வாசவதத்தை. மாதர் : மானனீகை.
எண்ணாயிரங் கை - எண்ணாயிர முறை.
|