பக்கம் எண் :

பக்கம் எண்:779

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
             டாயிழை பட்டதற் காற்றா ளாயவள்
  145     கையிற் கட்டிய கச்சவிழ்த் திட்டு
          மைவளர் கண்ணியை வாங்குபு தழீஇக்
          குழூஉக்களி யானைக் கோசலன் மகளே
          அழேற்கவெம் பாவா யரும்பெறற் றவ்வை
          செய்தது பொறுவெனத் தெருளாள் கலங்கி
 
           (வாசவதத்தை மானனீகையின் கட்டவிழ்த்து இரங்குதல்)
               144 - 149 : அவள்............பொறுவென
 
(பொழிப்புரை) உடனே அம் மானனீகையின் கையிற் கட்டியுள்ள கட்டினை அவிழ்த்து மைதீட்டப்பெற்று நீண்ட கண்களையுடைய அம் மானனீகையை எடுத்துத் தழுவிக்கொண்டு, "கூட்டமாகிய களிப்புற்ற யானையையுடைய கோசல மன்னன் மகளே ! அழாதே கொள்! எம்மருமைத் தங்காய்! நின் தமக்கையாகிய யான் செய்த தீமையைப் பொறுத்துக்கொள்!" என்று கூறி என்க.
 
(விளக்கம்) மைவளர் கண்ணி : மானனீகை. வாங்குபு - எடுத்து. அழேற்க - அழாதேகொள். எம் அரும்பெறற் பாவாய் என மாறுக. பாவாய் - ஈண்டுத் தங்காய் என்பதுபட நின்றது. செய்தது என்பது அறியாமையாற் செய்த தீமை என்பதுபட நின்றது.