பக்கம் எண் :

பக்கம் எண்:78

உரை
 
3. மகத காண்டம்
 
6. பதுமாபதியைக் கண்டது
 
         
     
           கவன்றன னிருந்த காலை யகன்று
           போமின் போமி னென்றுபுடை யோட்டும்
           காவ லாளரைக் கண்டிவட் புகுதரும்
     30    உரிமை யுண்டென வரிமா னன்ன
           வெஞ்சின விடலை நெஞ்சுநிறை துயரமொடு
 
           (இதுவுமது)
      27-31; அகன்று.........துயரமொடு
 
(பொழிப்புரை) விலகிப்  போங்கோள்! விலகிப்
  போங்கோள்; என்று உரப்பிக் கூறி ஆங்குள்ள மாந்தரைச்
  சேய்மையிலோட்டா  நின்ற காவலாளரைக் கண்டு இவ்விடத்தே
  இப்பொழுது  வந்து புகுதும் உரிமைமகளிர் உளர் போலும்
  என்று ஊகித்தறிந்து கொண்டு சிங்கம்போன்ற வெவ்விய 
  வெகுளியையுடைய தலைமகனாகிய அவ்வுதயணகுமரன் தனது 
  நெஞ்சம் நிறைந்த துன்பத்தோடே என்க,
 
(விளக்கம்) காவலர் ஆங்குள்ள மாந்தரை
  விலகிப் போமின் போமின் என்று ஓட்டுதலாலே உதயணன் 
  இவ்விடத்தே இப்பொழுது உரிமை மகளிர் உளர்போலும்
  என்று ஊகித்தறிந்தான் என்க. உரிமை-அரசனுடைய தேவி
  முதலிய மகளிர், அரிமான்-சிங்கம். விடலை- தலைவன்;
  உதயணன்.              :