பக்கம் எண் :

பக்கம் எண்:781

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
          காவல் வேந்தன் கரைந்ததற் கயிர்த்து
          மேவுகந் துகத்தியைக் கோயிலுண் மறைத்து
          மறுவி றேவிய ரிருவரும் வந்து
          திருவமர் மார்பனைத் திறத்துளி வணங்கலிற்
 
            (தேவியரிருவரும் உதயணன்பால் வருதல்)
               6 - 9 : காவல்............வணங்கலின்
 
(பொழிப்புரை) அது கேட்ட குற்றமற்ற தேவியரிருவரும் தம்மை வேந்தன் அழைத்தமைக்கு ஐயுற்றோராய்க் கண்டோர் விரும்புதற்குக் காரணமான பந்தாட்டம் வல்லுநளாகிய மானனீகையை மட்டும் அரண்மனைக்குள் மறைத்து வைத்தவராய்ப் பள்ளியம்பலத்திற்கு வந்து திருமகள் வீற்றிருக்கும் மார்பினையுடைய உதயண குமரனைக் கண்டு முறைப்படி வணங்குதலாலே என்க.
 
(விளக்கம்) வேந்தன் : உதயணன். கரைந்ததற்கு - அழைத்ததற்கு. அயிர்த்து - ஐயுற்று. அஃதாவது உதயணன் ஒரோவழி மானனீகையைக் கண்டு விரும்பியிருத்தல் கூடுமோ என்று ஐயுற்று என்றவாறு. மறு - குற்றம். திறத்துளி - முறைப்படி.