பக்கம் எண் :

பக்கம் எண்:782

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
          
     10       பெருகிய வனப்பிற் பேணுந் தோழியர்
             புகுதுக வென்றலும் புக்கவ ரடிதொழச்
             சுற்றமும் பெயருஞ் சொல்லுமி னீரென
             முற்றிழை மாதரை முறைமுறை வினவலின்
             மற்றவ ரெல்லா மறுமொழி கொடுப்பக்
 
          (உதயணன் தோழியரை வருவித்து வினவுதல்)
               10 - 14 : பெருகிய.........கொடுப்ப
 
(பொழிப்புரை) உதயண மன்னன் அப் பெருந்தேவிமாரை நோக்கி "அன்புடையீர் ! மிக்க வனப்போடு நும்மைப் போற்றும் நுந் தோழிமாரனைவரும் இப்பொழுது ஈண்டு வருவாராக!" என்று அறிவித்தமையாலே, அவ்வரசியர் கட்டளைப்படி அத்தோழிமாரனைவரும் பள்ளியம்பலத்தே புகுந்து மன்னவன் அடி தொழுது நிற்ப ; அரசன் அத் தோழியரைப் பார்த்து "நீயிர் நுங்கள் சுற்றத்தார் பெயரையும், நும் பெயரையும் சொல்வீராக !" வென்று நிரம்பிய அணிகலனணிந்த அத்தோழிமாரைத் தனித்தனியே வினவுதலாலே அத் தோழிமார் தாமும் மன்னன் வினவிற்கெல்லாம் மறுமொழி கொடாநிற்ப என்க.
 
(விளக்கம்) புகுதுக வென்று மன்னவன் கூறலும் என்க. புக்கவர் - புகுந்த தோழிமார். சுற்றம் - இருமுதுகுரவர் முதலியோர். மாதரை - அத் தோழிமாரை. மறுமொழி - விடை.