உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
13. முகவெழுத்துக் காதை |
|
ஒழிந்த மாதர்க்
குரைப்பதை யுண்டெனிற்
றனித்துநீ கண்டரு ளவைக்கு ளென்னெனப்
|
|
(வாசவதத்தை
சினத்தல்)
18 - 19 : ஒழிந்த.........என்னென
|
|
(பொழிப்புரை) அது கேட்ட வாசவதத்தை சினந்து "பெருமானே ! ஈண்டு வாரா தொழிந்தவளுக்கு நீ கூறவேண்டிய
காரியம் ஏதேனுமிருப்பின் அவளைத் தனியிடத்தே கண்டு கூறியருள்வதே தகுதியாம்; ஈண்டு
அவையின்கண் அவட்கு நீ கூறலாவது என்னையோ ?" என்று கூறாநிற்ப
வென்க.
|
|
(விளக்கம்) வாராதொழிந்த மாதர்க்கு என்க. உரைப்பதை -
கூறவேண்டிய காரியம். ஐ : சாரியை. அவை - பள்ளியம்பலம். அவைக்குள் நீ அவட்குக்
கூறத்தக்க காரியம் என்னை என்று வினவியபடியாம். இவ்வூடல் மொழிகள் பெரிதும்
நம்மனோர்க்கின்பந் தருதலுணர்க.
|