பக்கம் எண் :

பக்கம் எண்:787

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
         வாட்டிறல் வேந்தனை வணங்கித் தன்கை
    35   கூட்டின ளாகி மீட்டவண் மொழிவோள்
         கோசலத் தரசன் மாபெருந் தேவி
         மாசில் கற்பின் வசுந்தரி யென்னும்
         தேனிமிர் கோதை சேடி யேன்யான்
         மான னீகை யென்பதென் னாமம்
 
                 (மானனீகை கூறல்)
             34 - 39 : வாள்.........நாமம்
 
(பொழிப்புரை) அதுகேட்ட மானனீகை மீண்டும் தன் கைகளைக் கூப்பி வாளாற்றலுடைய அம்மன்னனை வணங்கிக் கூறுபவள், "வேந்தர் வேந்தே ! என் பெயர் மானனீகை என்பதாம். யான் கோசல நாட்டு அரசனுடைய கோப்பெருந்தேவியாகிய குற்றமற்ற கற்பினையுடைய வண்டுகள் முரலும் மலர்மாலையணிந்த ''வசுந்தரி'' என்னும் அரசியின் வண்ணமகள் ஆவேன்;" என்க.
 
(விளக்கம்) வேந்தன் : உதயணன். அவள் மீட்டுத் தன் கை கூட்டினளாகி வணங்கி மொழிவோள் என மாறிக் கூட்டுக. இமிர் - முரலுகின்ற. சேடி - தோழி. ஈண்டு வண்ணமகள் என்க. வண்ணமகள் - ஒப்பனை செய்யும் பணிப்பெண். அழகிய மகளாவேன் என்றும் ஒரு பொருள் தோன்றிற்று. நாமம் - பெயர்.