உரை |
|
3. மகத காண்டம் |
|
6. பதுமாபதியைக் கண்டது |
|
நீக்கச் சென்றனெ னெருந
லின்றிவண்
நீக்கப் பட்டனெ னாதலி
னிலையா
ஆக்கமுங் கேடும் யாக்கை சார்வா
35 ஆழிக் காலிற் கீழ்மேல்
வருதல்
வாய்மை யாமென மனத்தி னினைஇ |
|
(இதுவுமது) 32 - 36 ;
நீக்க..........நினைஇ |
|
(பொழிப்புரை) என்னையோ !
நேற்று எனக்குப் பிறர் வழிவிலக்கி விட யான் சென்றேன்! அந்நிலைமை
மாறி இற்றைநாள் நான், பிறராலே வழியினில்லாதே! அகன்றுபோ! என்று
விலக்கப்பட்டேன். இங்ஙனமா தலின் இவ்வுடலின் சார்வாக வருகின்ற
ஆக்கமாதல் கேடாதல் ஒருவர்பாலே நிலைத்து நிற்பன அல்ல ; அவை சகடக்கால்
போன்று கீழும் மேலுமாய் மாறிவருவது வாய்மையேயாம் என்று தன் நெஞ்சத்தே
நினைந்து என்க, |
|
(விளக்கம்) நெருநல் என்றது
இறந்தகால அணிமையைக் குறித்தற்கு ஒன்று கூறியபடியாம். நேற்று எனக்குப்
பிறர். வழிவிலக்க யான் சென்றேன்; இன்று என்னையே பிறர்
விலக்காநின்றனர். ,என்னே! இவ்வுலகியலிருந்தவாறு என்றிரங்கியபடியாம்.
இதனோடு. ''அகடுற யார்மாட்டு நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும்''
எனவரும் நாலடியையும் (2) நினைக. |