பக்கம் எண் :

பக்கம் எண்:790

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
         நாளும் புனைகென நன்னுதல் பெயர்ந்தவள்
         அடிமுதற் றொட்டு முடியள வாகப்
         புடவியி னறியாப் புணர்ப்பொடு பொருந்தி
         ஓவிய ருட்கு முருவக் கோலம்
   55    தேவியைப் புனைந்தபின் மேவிய வனப்பொடு
 
               (மானனீகை செயல்)
          51 - 55 : நன்னுதல்..........புனைந்தபின்
 
(பொழிப்புரை) அக்கட்டளை பெற்ற நல்ல நெற்றியையுடைய அம்மானன்ீகை பெருந்தேவியோடு சென்றவள், வாசவதத்தையின் அடிமுதல் முடியினது அளவும் இவ்வுலகின்கண் பிறர் யாரும் அறியாத வண்ணக் கூட்டொடு பொருந்திய ஓவியர் தாமும் அஞ்சுதற்குக் காரணமான அழகிய ஒப்பனை செய்தபின் என்க.
 
(விளக்கம்) கேட்டுப் பெயர்ந்தவளாகிய நன்னுதல் எனினுமாம். புடவி - உலகம். புணர்ப்பு - அணிகலச் சேர்க்கையுமாம். ஓவியர் - சித்திரம் வரைவோர். உட்கு - அச்சம். உருவம் - அழகு. கோலம் - ஒப்பனை. தேவியை : வாசவதத்தையை.