பக்கம் எண் :

பக்கம் எண்:800

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
          வடிவே லுண்கண் வாசவ தத்தை
          திண்டிற லரசனைச் சென்றனள் வணங்கலும்
          கண்டன னாகிக் கணங்குழை யெழுதிய
          இயனோக் கினனா யியையா வாசகம்
    130    தழலுறு புண்மேற் கருவி பாய்ந்தெனக்
          கலங்கின னாகி யிலங்கிழைக் கீதோர்
 
        (மானனீகை எழுதியதைக் கண்டு உதயணன்)
                   மீட்டும் எழுதிவிடல்)
          126 - 131 : வடிவேல்................கலங்கினனாகி
 
(பொழிப்புரை) வடித்த வேல்போலும் மையுண்ட கண்களையுடைய வாசவதத்தை மானனீகை ஒப்பனை செய்துவிட்ட உடன் அவ்வழகினையும் காட்டற்குத் திண்ணிய ஆற்றலுடைய அரசன்பால் சென்று வணங்காநிற்ப; அம்மன்னன் அவள் நெற்றியின் மேல் அம் மானனீகை எழுதிவிடுத்த மொழியைக் கண்டவனாய் அதன் பொருளைக் கூர்ந்துநோக்கி அதன்கண் எழுதப்பட்டிருந்த மறுப்பு மொழிகளால் முன்பு நெருப்புச் சுட்ட புண்ணின்மேல் வேல் நுழைந்தாற்போலப் பெரிதும் மனங்கலங்கியவனாய்; என்க.
 
(விளக்கம்) உண்கண் - மையுண்ட கண். காண்போர் மனத்தை உண்ணுங் கண்ணுமாம். அரசன் : உதயணன். கணங்குழை : மானனீகை. இயல் - மொழிக்கியல்பான பொருள் என்க. இயையா வாசகம் - மறுப்புமொழி; கருவி - படைக்கலம்.