உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
13. முகவெழுத்துக் காதை |
|
மான
னீகை வாசவ தத்தையைத்
தான்மறைந் தறைகுறி மேவின ளிருப்ப |
|
(மானனீகை
மறைந்திருத்தல்) 162
- 163 : மானனீகை............இருப்ப |
|
(பொழிப்புரை) இவ்வாறு உதயணனுக்கு இரவுக் குறி கூறி எழுதி
விடுத்த மானனீகை அவ்விரவின்கண் அவ்வாசவதத்தை தன் செயலை அறிந்துகொள்ளாதபடி
மறைந்து தான் அம்மன்னனுக்குக் கூறிய இடத்தின்கண் சென்று அவன் வருகையை
எதிர்பார்த்து விதுப்புற்றிருப்ப என்க. |
|
(விளக்கம்) வாசவதத்தை தன்னை அறியாமல் மறைந்து என்க. அறைகுறி - கூறிய இரவுக்குறி இடம். அஃதாவது
கூத்தப்பள்ளிக் குச்சரக்குடிகை உட்பாற்படு வேதிகை
என்க. |