| உரை |
| |
| 4. வத்தவ காண்டம் |
| |
| 13. முகவெழுத்துக் காதை |
| |
விடுத்தவ ளேகி யடுத்தது
முரைத்ததும் தன்னுட்
பொருமலொடு தனித்தனி தெரிய
இன்னதென் றெடுத்து நன்னுதற் குரைப்ப |
| |
(காஞ்சனமாலை
தான் அறிந்ததை
வாசவதத்தைக்கு
உணர்த்தல்) 182
- 184 : விடுத்தவள்..............உரைப்ப |
| |
| (பொழிப்புரை) இனி வாசவதத்தையால் விடுக்கப்பட்ட
காஞ்சனமாலை அம் மன்னன் சென்று மானனீகையைக் கண்டதும் கூறியதும் தன்னுள்ளே பொருமலோடு
தனித்தனியே விளங்கும்படி இன்னது இன்னது என்று எடுத்து எடுத்து நல்ல நுதலையுடைய அவ்
வாசவதத்தைக்கு உணர்த்தாநிற்ப என்க. |
| |
| (விளக்கம்) பெயர்; காஞ்சனமாலை. பொருமல் - துன்பத்தால் நெஞ்சம் விம்முதல். நன்னுதல் :
வாசவதத்தை. |