பக்கம் எண் :

பக்கம் எண்:816

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
           மான னீகையைக் காவல்வைத் தனளாய்
           மாந்தளிர் மேனியுங் காஞ்சன மாலையொடு
    220    நேர்ந்தவக் குறியிற் றான்சென் றிருப்ப
 
              (வாசவதத்தையின் செயல்)
            218 - 220 : மானனீகை...........இருப்ப
 
(பொழிப்புரை) கதிரவன் மறைந்த பின்னர் மாந்தளிர் போலும் நிறமுடைய வாசவதத்தை நல்லாள் அம்மானனீகையைச் சிறையில் அடைத்துக் காவல் வைத்தவளாய்த் தன் தோழியாகிய காஞ்சன மாலையோடே சென்று அம்மானனீகை குறிப்பிட்ட அக்கூத்தப்பள்ளி மேடைமீது அம்மானனீகைக்கு மாறாக இருளின்கண் தானே சென்றிராநிற்ப என்க.
 
(விளக்கம்) மாந்தளிர் மேனி : வாசவதத்தை. நேர்ந்த அக்குறி - மானனீகை மன்னனுக்கு நேர்ந்த குறியிடம் ; என்றது கூத்தப்பள்ளி வேதிகையை. தான் சென்றிருப்ப என்றது தன்னோடு வந்த காஞ்சன மாலையை வேறிடத்தே மறைத்து வைத்துத் தான் மட்டுமே சென்றிருப்ப என்பதுபட நின்றது.