பக்கம் எண் :

பக்கம் எண்:821

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
           பெட்ப வருதலிற் பிடித்தல் செல்லாள்
           நக்கன ளாகி மிக்கோய் கூறிய
           மானுந் தேனு மான னீகையும்
    250    யானன் றென்பெயர் வாசவ தத்தை
           காணெனக் கைவிட் டோடின னோடி
 
              (வாசவதத்தையின் செயல்)
            247 - 251 : பிடித்தல்.........காணென
 
(பொழிப்புரை) அவ்வாசவதத்தை தன் கொள்கையைக் கடைப்பிடித்தல் இயலாதவளாய்ப் பொள்ளென நகைத்துப் 'பெரியோய்! நீ கூறிய ''மானும் தேனும் மானனீகையும்'' யான் அல்லேன்காண். என் பெயர் வாசவதத்தை கண்டாய்!' என்று திருவாய் திறந்து கூறாநிற்ப என்க.
 
(விளக்கம்) பெட்ப - மிக. பிடித்தல் - கடைப்பிடித்தல். மிக்கோய் என்றது இகழ்ச்சி. நான் மானும் அல்லேன், தேனும் அல்லேன், மானனீகையும் அல்லேன், என் பெயர் வாசவதத்தை என்று சினந்து கூறியவாறு.