பக்கம் எண் :

பக்கம் எண்:822

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
           காணெனக் கைவிட் டோடின னோடி
           அடுத்த காட்சியிற் றனித்தொரு மண்டபத்
           தொளித்தன னாகித் திகைத்தன னிருப்பச்
 
                  (உதயணன் செயல்)
              251 - 253 : கைவிட்டு..........இருப்ப
 
(பொழிப்புரை) வாசவதத்தையின் குரல் கேட்ட அளவிலே மன்னன் அவளைக் கைவிட்டு விரைந்து ஓடினன். அங்ஙனம் ஓடியவன் அடுத்துள்ள அழகிய ஒரு மண்டபத்தினுட் புகுந்து ஒளிந்தவனாய் மனந் திகைத்திராநிற்ப என்க.
 
(விளக்கம்) காட்சி - அழகு. மண்டபத்துத் தனித்து ஒளித்தவனாய் என்க.