பக்கம் எண் :

பக்கம் எண்:823

உரை
 
4. வத்தவ காண்டம்
 
13. முகவெழுத்துக் காதை
 
           சினங்கொ ணெஞ்சொடு பெயர்ந்தவள் வதியப்
    255     புலர்ந்தது கங்குலும் பொருக்கெனப் பொலிந்தென்.
 
                    (உதயணன் செயல்)
                254 - 255 : சினம்........பொலிந்தென்
 
(பொழிப்புரை) இவ்வாற்றால் சினங்கொண்டு சென்ற கோப்பெருந்தேவி தன் மாளிகையில் சிந்தனையோடு சிறிது பொழுது உறையா நிற்பவே அவ்விரவும் புலர்ந்து உலகமும் பொலிவுற்றது என்க.
 
(விளக்கம்) பெயர்ந்தவள் : வாசவதத்தை. கங்குல் புலர்ந்தது உலகம் பொலிந்து தோன்றிற்று என வருவித் தோதுக.

         13. முகவெழுத்துக் காதை முற்றிற்று.