உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
14. மணம் படு காதை |
|
ஆகிய
துணரும் வாகை வேந்தன்
யூகியை வருகெனக் கூவினன்
கொண்டு புகுந்ததை
யெல்லாங் கணந்தனிற் புகல |
|
(உதயணன்
யூகியை வருவித்துக் கூறல்)
57 -
59 : ஆகிய...........புகல |
|
(பொழிப்புரை) இனி நிகழ்ந்த இந்நிகழ்ச்சியை
நினைக்கின்ற வெற்றியையுடைய அரசன் யூகியை அழைத்துத் தனியிடத்தே கொண்டு ஆங்கு
நிகழ்ந்ததையெல்லாம் நொடிப்பொழுதில் அவன்பாற் கூறாநிற்ப
என்க. |
|
(விளக்கம்) ஆகியது - நிகழ்ந்த செயல். அஃதாவது மானனீகை வாசவதத்தையால் ஒறுக்கப்படுதல். புகுந்ததை
- நிகழ்ந்ததனை. கணம் - நொடிப்பொழுது. |