பக்கம் எண் :

பக்கம் எண்:837

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
           நின்ற வயந்தக னிகழ்ந்ததை யுணர்த்தென
  80       அங்கொரு சிலதியை யரசற் குய்ப்பப்
 
           (வயந்தகன் சிலதியை உதயணன்பால் விடுத்தல்)
                  79 - 80 : நின்ற.............உய்ப்ப
 
(பொழிப்புரை) அப்பொழுது அங்கு நின்ற வயந்தகன் அங்கு எதிர்ப்பட்ட ஒரு பணிமகளை நோக்கி "ஏடி! நீ விரைந்து சென்று இங்கு நிகழ்ந்ததனை நம்பெருமான்பால் சென்று அறிவிப்பாயாக" என்று சொல்லி அரசன்பால் விடுப்ப என்க.
 
(விளக்கம்) சிலதி - பணிப்பெண். அரசன் : உதயணன்.