பக்கம் எண் :

பக்கம் எண்:841

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
         கோமகற் கவ்வயிற் கோசலத் தவர்புகழ்க்
   105    காவலன் றூதுவர் கடைத்தலை யாரெனக்
         கடைகாப் பாளன் கைதொழு துரைப்ப
 
        (கோசலத்தரசனுடைய தூதுவர் வருகையை வாயில்காவலன் உதயணனுக்குக் கூறுதல்)
              104 - 106 : கோமகன்............உரைப்ப
 
(பொழிப்புரை) அப்பொழுது கோசல நாட்டினரின் புகழ் மிக்க அரசனுடைய தூதுவர் வந்து நம் அரண்மனை முற்றத்தின்கண் நிற்கின்றனர் என்று வாயில் காவலன் வந்து கைகூப்பித் தொழுது உதயண மன்னனுக்குக் கூறா நிற்ப என்க.
 
(விளக்கம்) கோமகற்கு : உதயணனுக்கு. அவ்வயின் - அப்பொழுது. அவ்விடத்தே எனினுமாம். காவலன் : கோசலமன்னன். கடைத்தலையார் - வாயிலிடத்தார். கடை - வாயில்.