உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
14. மணம் படு காதை |
|
தேவிகட் போக்கத் திறத்துமுன்
கொண்டு 115
பதுமா பதியைப் பருகென்
றளிப்ப
எதிரெழுந் தனளா யதுதான் வாங்கிக்
|
|
(வாசவதத்தை ஓலைபெற்று
ஓதுவித்தல்)
114 - 116 : அத்திறத்து............வாங்கி
|
|
(பொழிப்புரை) அவ்வாற்றால் வாசவதத்தை அத்திருமந்திர ஓலையை முற்படக் கைக்கொண்டு தன்
பக்கத்திலிருந்த பதுமாபதியை நோக்கி, "தங்காய்! இத்திருமந்திர ஓலையை நீ படித்துக்
கூறுக" என்று கொடுப்ப அப்பதுமாபதி எழுந்து எதிர்சென்று அத்திருமந்திர ஓலையை இரு
கைகளாலும் வாங்கிக்கொண்டு என்க.
|
|
(விளக்கம்) போக்கு அத்திறத்து என்னும் நிலைமொழி
வருமொழிகள் புணருங்கால் வருமொழி முதலாகிய அகரஉயிர் கெட்டது. அத்திறத்து -
அவ்வாற்றால். பகருக - கூறுக. அது - அத்திருமந்திர
ஓலையை.
|