பக்கம் எண் :

பக்கம் எண்:848

உரை
 
4. வத்தவ காண்டம்
 
14. மணம் படு காதை
 
            பழுதின் றாக முழுவது முணர்ந்து
            வாசக முணரேன் வாசிமி னடிகளென்
            றாசி றவ்வை தன்கையிற் கொடுப்ப
 
        (பதுமாபதி ஓலையை வாசவதத்தையிடம் கொடுத்தல்)
                 136 - 138 : பழுது............கொடுப்ப
 
(பொழிப்புரை) குற்றமின்றி முழுதும் நன்கு தனக்குள் ஓதி உணர்ந்து அச்செய்தியைத் தானே கூறத் துணியாமல் "அடிகளே! யான் இவ்வோலையின் பொருளை உணர்கின்றிலேன். ஆதலின் தாங்களே ஓதி உணர்ந்திடுக!" என்று கூறிக் குற்றமற்ற தமக்கையாகிய வாசவதத்தையின் கையிற் கொடாநிற்ப" என்க.
 
(விளக்கம்) பழுது - ஓதுவோர் குறை. முழுவதும் - பொருள் முழுவதையும். வாசகம் : ஆகுபெயர். அடிகள் வாசிமின் - அடிகளே ஓதிக்காண்மின். அடிகள் : முன்னிலைப் புறமொழி. ஆசு - குற்றம். தவ்வை : வாசவதத்தை.