பக்கம் எண் :

பக்கம் எண்:85

உரை
 
3. மகத காண்டம்
 
6. பதுமாபதியைக் கண்டது
 
         
     
           உலைப்பருந் தானை யுதயண குமரற்
           கிலைக்கொழுந்து குயின்ற வெழில்வளைப் பணைத்தோள்
           உரிய வாயின வுணர்மி னென்றுதன்
     80    அரிமதர் நெடுங்க ணயனின் றோர்க்கும்
           அறியக் கூறுத லமர்ந்தன போல
           நெறியிற் றிரியா நிமிர்ந்துசென் றாட
 
         பதுமாபதியின் கண்கள்
    77-82; உலைப்பரு. ..............சென்றாட
 
(பொழிப்புரை) அவ்வழி, பதுமாபதியின் செவ்வரிபரந்த
  மதர்த்த நெடிய கண்கள் பகைவராற் குலைத்தற்கரிய படைகளையுடைய
  உதயண குமரனுக்கு இலையுங்கொழுந்தும் எழுதப்பட்ட அழகிய
  வளையலணிந்த இவளுடைய பருத்த தோள்கள் உரியன வாயின;
  இச்செய்தியை எல்லீரும் அறிந்துகொள்ளுங்கோள்! என்று அயலிலே
  நின்றோரும் அறிந்து கொள்ளுமாறு கூறவிரும் பினபோன்று
  தமக்கியற்கையாகிய நெறியினின்றும் பிறழ்ந்து நிமிர்ந்து இருமருங்கினும்
  சென்று சென்று ஆடாநிற்ப என்க.
 
(விளக்கம்) உலைப்பருந்தானை பகைவராற் குலைத்தற்
  கியலாத  ஆற்றலுடைய படை. இலையும் கொழுந்துமாகத்
  தொய்யில் எழுதப்பட்.ட தோள் என்க. இலையுருவமும்
  கொழுந்துருவமும்பட இயற்றிய வளையல் எனினுமாம்.
  அமர்ந்தன விரும்பின திரியா - திரிந்து.