உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
14. மணம் படு காதை |
|
வரிநெடுந்
தொடையல் வயந்தக னவ்வயின் 165
விரைவிற் சென்று வேந்தற் குரைப்ப
|
|
(வயந்தகன்
உதயணனுக்குத்
தெரிவித்தல்)
164 - 165 : வரி...............உரைப்ப
|
|
(பொழிப்புரை) அப்பொழுது வரிந்துகட்டிய நெடிய பூந்தொடையலை அணிந்த வயந்தக குமரன் விரைந்து சென்று
இந்நிகழ்ச்சிகளை உதயணனுக்குக் கூறாநிற்ப என்க.
|
|
(விளக்கம்) வரி நெடுந் தொடையல் : வினைத்தொகை. வரிதல்
- கட்டுதல். இனி வரிகளையுடைய தொடையல் எனினுமாம். தொடையல் - ஒருவகை
மாலை.
|