| உரை |
| |
| 4. வத்தவ காண்டம் |
| |
| 15. விரிசிகை வரவு குறித்தது |
| |
55 மறுநீங்கு
சிறப்பிற் புண்ணியத் திங்கட்
கணைபுரை கண்ணியைக் கவான்முத
லிரீஇப் பிணையல்
சூட்டினை பெருந்தகை மற்றிது
|
| |
(உதயணன்
விரிசிகைக்கு மாலைசூட்டிய
செய்தியைக்
கூறுதல்)
55 - 57 :
மறு............சூட்டினை
|
| |
| (பொழிப்புரை) ''களங்கம் நீங்கிய சிறப்பினையுடைய
புண்ணியமுடைய திங்கள் மண்டிலத்தே வைக்கப்பட்ட இரண்டு அம்புகளை ஒத்த கண்களையுடைய என்
மகளாகிய அவ்விரிசிகையை நீ நினது தொடையின்மேல் ஏற்றிவைத்து அவள் கூந்தலிலே
மலர்சூட்டி விட்டனை அல்லையோ ?'' என்க.
|
| |
| (விளக்கம்) மறு
- களங்கம். இனி, புண்ணியத் திங்களாகிய அப்பொழுது எனினுமாம். கவான் - தொடை. இரீஇ
- இருத்தி. பிணையல் - மாலை. இது முற்காலத்தே உதயணன் விரிசிகையை மெய்தொட்டுப்
பயின்றதனை நினைவுறுத்தியபடியாம்.
|