பக்கம் எண் :

பக்கம் எண்:868

உரை
 
4. வத்தவ காண்டம்
 
15. விரிசிகை வரவு குறித்தது
 
          மாதவ னுரைத்த வதுவை மாற்றம்
          காவற் றேவிக்குக் காவல னுணர்த்த
 
        (விரிசிகையின் வதுவையை வாசவதத்தைக்கு உணர்த்தல்)
                81 - 82 : மாதவன்............உணர்த்த
 
(பொழிப்புரை) அதுகேட்ட அரசன் அத்துறவோன் கூறிய திருமணச்செய்தியை நெஞ்சு காத்தலில் சிறந்த கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தைக்கு உணர்த்தாநிற்ப என்க.
 
(விளக்கம்) வதுவைமாற்றம் - திருமணம் பற்றிய செய்தி. தேவி : வாசவதத்தை. காவலன் - உதயணன்.