(விளக்கம்) அவந்திகை : வாசவதத்தை. இஃது அவட்கு இடத்தால் வருபெயர். உரிதின் - உரிமையோடு.
மாதவன் - விரிசிகை தந்தை. வாழ்த்துநர் - வாழ்த்தும் புலவர் முதலியோர். ஆர - நுகர.
மலரி - விரித்து. பெரும்பொருள் என்றது விரிசிகையை. என்னை?
'பெண்ணிற் பெருந்தக்க யாவுள
கற்பென்னுந் திண்மையுண் டாகப் பெறின்' (குறள்.
54)
எனவரும் திருக்குறளும் காண்க. இனி
இவ்வாசிரியரே,
'வானுறை யுலகினும் வையக
வரைப்பினும் தான விளைவினுந் தவத்தது
பயத்தினும் எண்ணரும் பல்லுயி ரெய்தும்
வெறுக்கையுட் பெண்டிருண் மிக்க பெரும்பொருள்
இன்மையின் உயிரெனப் படுவ துரிமை யாதலின்' (1-38 :
263-7)
என மிக அழகாகக் கூறுதலுங் காண்க.
நீர்வார்த்துக் கொடுப்பக் கொண்டு என்க. மாதரை - விரிசிகையை. சீர்இல் - சிறந்த
அரண்மனை. சிறப்போடு கூட்டும் எனினுமாம். நாடு நகரம் என்பன ஆகுபெயர்கள். நாள் -
மணம் செய்தற்குரிய நன்னாள். அறைய - அறைவித்து. மாக விசும்பு : இருபெயரொட்டு.
பொன்நகர் பொலிய ஒப்பனை செய்வித்து
என்க.
|