உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
15. விரிசிகை வரவு குறித்தது |
|
வண்ட
லாடிய மறுகினுட் காண்பவை 125 கண்டினிது
வரூஉங் கால மன்றெனக்
காவல் கொண்டன ரன்னையர்
நம்மென நோவன
ராகி நோய்கொள் வோரும்
|
|
(இதுவுமது)
124 - 127 : வண்டல்.........கொள்வோரும்
|
|
(பொழிப்புரை) எங்கள் தாய்மார் எம்மை நோக்கி ஏடிமாரே!
நீவிர் மணல்வீடு கட்டி விளையாட்டயர்ந்த தெருவின்கண் காணும் காட்சியை யெல்லாம்
இனிது கண்டு வரும் பேதைப் பருவம் உடையீர் அல்லீர். இப்பொழுது பெதும்பைப்
பருவத்தினிர் ஆதலின் புறத்தே போகாதே கொண்மின் ! என்று காவல் செய்யாநின்றனர்
என்று மனம் நொந்து வருந்துவோரும் என்க.
|
|
(விளக்கம்) வண்டல் - விளையாட்டு. மறுகு - வீதி. காண்பவை கண்டு வரூஉம் காலமன்று என்றது நீயிர்
இப்பொழுது பேதைப்பருவம் கடந்து பெதும்பைப் பருவம் எய்தினிர் என்றவாறு. அன்னையர் -
செவிலித்தாயர். நம் - நம்மை; இரண்டனுருபு தொக்கது. நோய்கொள்வோர் -
வருந்துவோர்.
|