உரை |
|
4. வத்தவ காண்டம் |
|
15. விரிசிகை வரவு குறித்தது |
|
ஏனையோர் பிறரும் புனைவன ரீண்டி
விரைகமழ் கோதை விரிசிகை மாதர்
130 வருவது வினவிக் காண்பது
மால்கொளக் காண்பதொன்
றுண்டெனக் கைத்தொழின் மறக்கும்
மாண்பதி யியற்கை மன்னனு முணர்ந்து
|
|
(இதுவுமது)
128 - 132 : எனையோர்.........உணர்ந்து
|
|
(பொழிப்புரை) இங்ஙனமே பிற மகளிரும் மற்றவரும் தம்மை
ஒப்பனை செய்து கொண்டவராய் யாண்டும் நெருங்கி மணங் கமழும் மலர்மாலையினையுடைய
விரிசிகை நங்கை வருவதனை ஒருவரை ஒருவர் வினவி அவளைக் காண்டற்குப் பெரிதும்
விரும்பாநிற்ப; இவ்வாறு அந்நகரத்து மாந்தர் தாம் இனிக் காண்பதற்குரிய தெய்வக்
காட்சி யொன்றுளது என்று அதனையே நினைந்து தத்தம் கைத்தொழிலையும் மறந்து மால்
கொள்ளும் தன்மையை உதயண மன்னனும் ஒற்றரால் உணர்ந்து கொண்டு
என்க.
|
|
(விளக்கம்) புனைவனர் - ஒப்பனை செய்துகொண்டு. வருவதனை வினவி என்க. மால் - மயக்கம். ஒரு
தெய்வீகக் காட்சியுண்டு என்று கருதி என்க. மாண்பதி - மாட்சிமையுடைய அந் நகரத்து
வாழும் மாந்தர்கள்; ஆகுபெயர். மன்னன் : உதயணன்.
|