(விளக்கம்) உரை - வாய்மொழி. ஓத்து - நூல்; என்றது
நூலினின்றும் எடுத்துக் கூறும் மொழிகளை. ஓம்படை - பாதுகாப்புச் சொல். தவ்வையர் -
தமக்கைமார்; என்றது வாசவதத்தை முதலிய தேவிமார் மூவரையும். கோ : உதயணன். விரிசிகை
தமர் மாந்தர்க்குக் கூறி அவளை விடுத்தனர் என்க. தமர் என்றது ஈண்டுத் தவப்பள்ளியில்
வாழும் விரிசிகை தாய் முதலிய முதுமகளிரை.
16. விரிசிகை போத்தரவு
முற்றிற்று.
|