உரை |
|
5. நரவாண காண்டம் |
|
1. வயாக் கேட்டது |
|
மூவ ராவா
ரொருமகற் கொருத்திகண்
மேவரத் தோன்றிய மக்களம்
மூவரும் ஆன்ற
கேள்வியொ டறநெறி திரியார் 15
மூன்றுதிறம் பட்ட விருப்பின ரவருள்
|
|
(வணிகர்
வழக்குரைத்தல்) 12
- 15 : மூவர்.........விருப்பினர்
|
|
(பொழிப்புரை) பெருமானே! ஒரு
தந்தைக்கும் ஒரு தாய்க்கும் விருப்பமுண்டாகப் பிறந்த மக்கள் மூவராவர். அம்மக்கள்
மூவரும் நிரம்பிய கல்வி கேள்விகளையுடையராய் அறநெறியிற் பிறழாதவரும் ஆவர். மேலும்
ஒவ்வொருவரும் தத்தமக்குத் தனித்தனியான விருப்பத்தையுமுடையராவர்'
என்க.
|
|
(விளக்கம்) ஒரு மகற்கு - ஒரு தந்தைக்கு. ஒருத்திகண் - ஒரு தாய் வயிற்றில்.
மேவர - விருப்பமுண்டாக. மக்கள் மூவராவார் எனக் கூட்டுக. கேள்வி என்றமையால்
கல்வியுங்கொள்க. மூன்றுதிறம் - மூன்று வகைப்பட்ட.
|