பக்கம் எண்:91
|
|
உரை | | 3. மகத காண்டம் | | 6. பதுமாபதியைக் கண்டது | |
மாயிரு ஞாலத்து மன்னவன் மகளே
125 ஞாயிறு படாமற் கோயில்
புகுதல்
இன்றை நன்னாட் - கியல்புமற்
றறிகெனத்
தொன்றியன் மகளிர் தொழுதனர் கூறச்
| | (பதுமாபதி அரண்மனை
அடைதல்) 124-127 ;
மாயிறு,,,,,,,.,,,,,,,,கூற
| | (பொழிப்புரை) பழைய
முறைமையையுணர்ந்த மகளிர் சிலர் கோமகளைக் கைகூப்பித் தொழுது
''பெரிய நிலவுலகத்தை ஆளும் எங்கள் மன்னன் மகளே ! காமன் விழவின்
முதனாளாகிய நல்ல இற்றை நாளிலே ஞாயிறு மறைதற்கு முன்பே அரண்மனை மகளிர்
அரண்மனைக்குப் போதல் முன்னோர் முறைமையாகும்; இதனைத்
திருவுள்ளம் பற்றுக!' என்று அறிவுறுத்த என்க.
| | (விளக்கம்) கோயில் -
அரண்மனை. இன்றை நன்னாள் என்றது விழவின் முதனாளை. அரண்மனை
மகளிர்க்கியல்பு என்க, தொன்றியல் மகளிர். பழைய முறைமையினை அறிந்த
மகளிர்,
|
|
|