உரை |
|
5. நரவாண காண்டம் |
|
1. வயாக் கேட்டது |
|
தவ்வையைச்
சேர்ந்து கவ்விதின்
மொழியச் சென்றது
நின்றதுஞ் சிதைவின்
றெண்ணி நன்றுசேய்
வாழ்க்கை யென்றெடுத் திற்றென 30
ஒன்று முரையா ளொருமைக்
கோடலின்
வென்றித் தானை வீர
வேந்தநின்
அடிநிழ லடைந்தன மதுவெங் குறையென
|
|
(இதுவுமது) 27
- 32 : தவ்வையை.......குறையென
|
|
(பொழிப்புரை) "அவ்விருவரும் தம்
தாயின்பாற் சென்று அழுகை யொலியோடு கூறாநிற்ப, அவள் அவன் சென்றதனையும் நகரின்கண்
நின்ற நிலைமையினையும் ஒவ்வொன்றாக நினைந்து நினைந்து 'என் மகன் வாழ்க்கை நன்று !
நன்று !' என்று மனத்தினுள் வருந்தித் தன் வாயால் இஃது என்று யாதொன்றனையும் எடுத்துக்
கூறாளாய் மௌனமுறாநிற்றலால், வென்றியையுடைய படையையுடைய வேந்தனே ! யாம் அவனுடைய
பொருளை என் செய்வது என்பது தெளியாமல் அது தீர்தற் பொருட்டு நின்னுடைய திருவடி நீழலை
எய்தினேம், அதுவே எங்கள் குறையாகும்,' என்று கூறாநிற்ப என்க.
|
|
(விளக்கம்) தவ்வை - தாய். கவ்விதின் - அழுகையொலியொடு. அவன்
சென்றதனையும் ஈண்டி எஞ்சிநின்ற பொருளையும். ஒருமைக் கோடல் - மௌனமுறல். வேந்த :
விளி. குறை - செய்துதீரவேண்டிய இன்றியமையாச் செயல்.
|