பக்கம் எண் :

பக்கம் எண்:916

உரை
 
5. நரவாண காண்டம்
 
  1. வயாக் கேட்டது
 
            வேந்தனும் வினவியவள் வேட்கை விரும்பித்
            தாம்படு மாந்தர்க்குத் தண்ணீர் போலும்
      75    காம்படு தோளியொடு கலந்துமகிழ் வெய்திய
 
                 (உதயணன் செயல்)
             73 - 75 : வேந்தனும்.........எய்திய
 
(பொழிப்புரை) அம்மன்னவன்றானும் அவள் சிந்தனையை வினவி அவள் விரும்புவதனைத் தானும் விரும்பி நீர் வேட்கை மிக்க மாந்தருக்குத் தண்ணீர் எப்படியோ? அப்படிப் போலக் காமவேட்கையுடைய தனக்கு இன்றியமையாதவளாகிய மூங்கில் போலும் தோளையுடைய அவ்வாசவதத்தை நல்லாளோடு கூடிக் களித்த என்க.
 
(விளக்கம்) வேந்தன் : உதயணன். அவள் சிந்தனையை வினவி - அவள் வேட்கையைத் தானும் விரும்பி என்க. தாம் - தாகம். காம்பு - மூங்கில். தோளி : வாசவதத்தை.