உரை |
|
5. நரவாண காண்டம் |
|
1. வயாக் கேட்டது |
|
மற்றுப்பிறர்க்
குரையாண் மனத்தே யடக்கி 195
ஈர்க்கொடு பிறந்த விளந்தளிர்
போல மாக்கே ழாகமு
மருங்குலும் வருந்த
முலைக்கண் கறுப்பத் தலைக்கவி
னெய்தி
|
|
(இதுவுமது) 194
- 197 : மற்றுப்........எய்தி
|
|
(பொழிப்புரை) இவ்விருப்பத்தைப் பிறர்க்குக் கூற நாணித் தன் மனத்தின்கண் அடக்கி நரம்போடு
தோன்றிய இளந்தளிர் போல மாமை நிறமுடைய தன்மெய்யும் இடையும் வருந்தா நிற்பவும்
முலைக்கண்கள் கறுப்பவும் முதற்சூல் அழகுபெற்று என்க.
|
|
(விளக்கம்) தன் விருப்பம் நிறைவேற்றுதற்கு இயலாதனவாய் இருத்தலால் அதனைப்
பிறர்க்குக் கூறவும் நாணி மனத்திலே அடக்கினள் என்பது கருத்து. ஈர்க்கு - நரம்பு.
மாக்கேழ் - மாமை நிறம். மருங்குல் - இடை. தலைக்கவின் - தலைச்சூலால் உண்டாகும்
புத்தழகு.
|