உரை |
|
5. நரவாண காண்டம் |
|
1. வயாக் கேட்டது |
|
220 கூடிய கொழுநன் கொழுங்குடர்
மிசைகுற ஓடிய
வுள்ளத் துயர்துணைத் தேவியைக்
குறையிற் கேட்டுக் கொடுத்துநோய்
தணித்த மறையில்
பெரும்புகழ் மன்னவன் போல
என்ன தாயினு மீகுவன் மற்றுநின்
225 இன்னா வெந்நோ யெத்திறத்
தாயினும் ஒடுங்கா
வுள்ளமொ டகற்றுவல்
யானெனக் கடுஞ்சூ
ளறைஇக் காவலன் கேட்ப
|
|
(இதுவுமது)
220 -
227 : கூடிய.............கேட்ப
|
|
(பொழிப்புரை) "முன்னொரு
காலத்தே கருவுற்றிருந்த கோப்பெருந்தேவி ஒருத்தி வயா நோய் காரணமாகத் தன்னைக் கூடிய
கணவனின் கொழுவிய குடரைத் தின்ன விரும்பிய நெஞ்சினை உடையளாய் இருந்தனளாம்.
உயர்ந்த தன் வாழ்க்கைத் துணையாகிய அத்தேவியை அழியாத பெரும்புகழ் படைத்த
மன்னவனாகிய அவள் கணவன் அவள்பால் அவள் விருப்பத்தை அவள் கூறாளாகவும் குறையிரந்தும்
கேட்டு அவள் விரும்பியபடியே தன் குடரைக் கொடுத்து அவள் வயா நோயைத் தீர்த்தனனாம்.
யானும் அம்மன்னவன் போலவே நீ விரும்பும் பொருள் எத்தகையதாயினும் வழங்குவேன்காண் !
நங்காய் மேலும் இந்த இன்னலுடைய வெவ்விய வயா நோய் எத்தகையதாயினும் யான் மடியின்றி
அகற்றுவேன் காண்!' என்று கடிய சூள் மொழிந்து அம்மன்னவன் வினவாநிற்றலாலே
என்க.
|
|
(விளக்கம்) ஓடியஉள்ளம் - விரும்பிய நெஞ்சம். மறையில் - மறைதல் இல்லாத.
இன்னா - துன்பமுடைய. ஒடுங்கா உள்ளம் - மடிதலில்லாத நெஞ்சம். சூள் - சூளுறவு. காவலன் :
உதயணன்.
|