பக்கம் எண் :

பக்கம் எண்:94

உரை
 
3. மகத காண்டம்
 
6. பதுமாபதியைக் கண்டது
 
         
     
           நச்சுவனர் வரூஉ நான்மறை யாளரை
           அச்சங் கொள்ள வகற்றன்மி னென்றுதன்
           ஆணைவைத் தகன்றனள் யாண ரமைத்தவிஃ
     145    தறிமி னீரெனப் பொறியமை புதவிற்
           கடைமுதல் வாயிற் கடுங்காப் பிளையரை
           அடைமுது மாக்க ளமைத்தகன் றமையிற்
 
          (இதுவுமது)
    142-147 ; நச்சுவனர்............அகன்றமையின்
 
(பொழிப்புரை) பதுமாபதியோடு வந்த காஞ்சுகி முதியோர்
  பொறியமைந்த அரண்மனை வாயிலைக் கடிதிர் காவல்புரிகின்ற
  மறவர்க்கு அறிவுறுத்து மேலும் தானம் பெறுதலை விரும்பி வருகின்ற
  நான்கு மறைகளையும் ஓதியுணர்ந்த அந்தணர் அஞ்சும் படி போக்கா
  தொழிமின் என்று நம் பதுமாபதி கட்டளையிட்டுச் சென்றனள்; புதுவதாக
  விதித்த இக்கட்டளையையும் நீயிரெல்லாம் அறிந்தொழுகுமின்! என்றும்
  அக்காவலரை அடக்கிப் போனமையாலே என்க.
 
(விளக்கம்) நச்சுவனர் - விரும்பியவர்- -ஆணை - கட்டளை.
  யாணர்-ஈண்டுப் புதிய கட்டளை என்னும் பொருண்மேனின்றது.
  புதவு-கதவு, முதுமாக்கள் - காஞ்சுகி முதியோர்