பக்கம் எண் :

பக்கம் எண்:940

உரை
 
5. நரவாண காண்டம்
 
2. இயக்கன் வந்தது
 
          வணங்கின னிருந்துழி மணங்கமழ் கோதை
          கருத்தினை யெல்லாம் விரித்தவற் குரைப்பப்
 
           (உதயணன் உ.ருமண்ணுவாவுக்கு உரைத்தல்)
               6 - 7 : மணங்கமழ்.............உரைப்ப
 
(பொழிப்புரை) உதயணமன்னன் நறுமணங்கமழும் மலர் மாலையணிந்த வாசவதத்தையினது வயாவிருப்பத்தினை யெல்லாம் அவ்வமைச்சனுக்கு விரித்துக் கூறாநிற்ப என்க.     
 
(விளக்கம்) கோதை : வாசவதத்தை. கருத்து - ஈண்டு விருப்பம். அவற்கு : உருமண்ணுவாவுக்கு