பக்கம் எண் :

பக்கம் எண்:948

உரை
 
5. நரவாண காண்டம்
 
2. இயக்கன் வந்தது
 
            வடிவேன் மன்னனும் படிவமொ டிருந்து
            வாய்மையின் வழாஅத் தூய்மைய னாகி
            நினைப்பிற் றிரியா நெறிமையி னோதி
            இமைப்போன் கண்மிசை யிலங்கிய வொளியொ
 
              (உதயணன் இயக்கனை நினைந்தது)
               61 - 64 : வடிவேன்............கண்மிசை
 
(பொழிப்புரை) அம்மந்திரம் பெற்ற வடித்த வேலையுடைய அவ்வுதயணமன்னனும் மனமொழி மெய்களையடக்கி நோன்போடிருந்து வாய்மையில் வழுவாத தூய்மையுடையனாய் அவ்வியக்கனை நினைக்கும் அவ்வொரு நினைப்பினின்றும் பிறழாதவனாய் முறைமையோடே அம்மந்திரத்தை ஓதிக் கண்ணிமைத்திருக்கும் அம்மன்னன் கண்முன்னே என்க.
 
(விளக்கம்) வடிவேல் : வினைத்தொகை. படிவம் - நோன்பு. நெறிமை - முறைமை. மந்திரங் கணிப்போர் கண்ணிமைத்திருந்து கணித்தல் மரபு.