உரை |
|
5. நரவாண காண்டம் |
|
3. இயக்கன் போனது |
|
மற்றியாந் தீர்க்கு மதுகை
யறியேம்
நயந்த நண்பி னன்னர்
நோக்கி்
உடையழி காலை யுதவிய கைபோல்
40 நடலை தீர்த்த னண்பன
தியல்பென
உரத்தகை யாள வுள்ளினே
னென்னத்
திருத்தகு மார்வன் றிறவதிற் கிளப்பத்
|
|
(இதுவுமது)
37 - 42 : மற்று...........கிளப்ப |
|
(பொழிப்புரை) 'அன்பனே! வெவ்விய அவ் வயாநோயைத்
தீர்க்கும் வலியும் இல்லேம் ; வழியும் அறிகின்றிலேம். தான் விரும்பிய நண்பினது
நலத்தை நோக்கி ஒருவனுடைய ஆடை அவிழும்பொழுது அவ்வாடையை மீண்டும் விரைந்து
உடுத்துகின்ற அவனது கையைப்போல நண்பனது வருத்தம் கண்டுழி அவன் வருத்தத்தை விரைந்து
தீர்த்தல் அவனுடைய நண்பனின் கடமையாம். ஆகவே அறிவாற்றலும் மெய்யாற்றலுமுடைய நண்பனே
! அவள் நோய் தீர்த்தற்பொருட்டு யான் இப்பொழுது நின்னை நினைத்தேன்காண்' என்று
செல்வத்தால் தகுதி பெற்ற மார்பினையுடைய அவ்வுதயண மன்னன் நன்றாக எடுத்துக் கூறா
நிற்ப என்க. |
|
(விளக்கம்) மதுகை - வலிமை. வலியுமிலேம்; வழியுமறியேம் என
விரித்தோதுக. உடையழிகாலை யுதவிய கைபோல் நடலை தீர்த்தல் நண்பனதியல்பு என்னும்
இத்தொடரின்கண்,
' உடுக்கை யிழந்தவன் கைபோல
வாங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு ' (குறள்.
788) எனவரும் திருக்குறளையும் காண்க. நடலை - துன்பம். உரத்தகையாள என்றது நஞ்சுகனை
விளித்தபடியாம். திருத்தகு மார்வன் : உதயணன். திறவதின் - நன்றாக. கிளப்ப -
கூற. |