பக்கம் எண் :

பக்கம் எண்:963

உரை
 
5. நரவாண காண்டம்
 
3. இயக்கன் போனது
 
           வள்ளிதழ் நறுந்தார் வச்சிர வண்ணன்
           அடிநிழல் குறுகிய காலை மற்றென்
     90    மனத்ததை யியைகென நினைத்தனள் செல்லா
 
            (பத்திராபதி குபேரன்முன் செல்லுதல்)
             88 - 90 : வள்ளிதழ்...............செல்லா
 
(பொழிப்புரை) பெரிய இதழையுடைய நறிய மலர்மாலையணிந்த குபேரனுடைய அடி நீழலிலே அணுகிய காலத்தும், என்னுடைய மனத்தின்கண் தோன்றிய யானைப்பிறப்பு எனக்கு வருவதாக என்று நினைத்தவளாய்ச் செல்லாநிற்றலால்...... என்க.
 
(விளக்கம்) வச்சிரவண்ணன் - குபேரன். அடிநிழல் குறுகிய காலை என்றது முன்னிலையிற் சென்ற பொழுது என்றவாறு. மனத்ததை : ஐகாரம் சாரியை. மனத்தின்கண் தோன்றிய யானைப் பிறப்பு என்க இப் பகுதியில் 90 ஆம் அடியை யடுத்து ஓரடி முழுதும் அழிந்தொழிந்தது.