பக்கம் எண் :

பக்கம் எண்:970

உரை
 
5. நரவாண காண்டம்
 
  3. இயக்கன் போனது
 
          வீழ்ந்த காலை மேயவ னத்தலை
          ஆய்ந்த வுள்ளமொடு சேர்ந்தன னாகி
          அஞ்சா தைம்பத நினைமதி நீயென
    135    எஞ்சா தவணீ யியல்பினிற் றிரியாது
          சிந்தையொடு முடிந்தது காரண மாக
          ஊனமை விலங்கி னுடம்பவ ணொழிய
 
                   (இதுவுமது)
          132 - 137 : மேயவன்...............ஒழிய
 
(பொழிப்புரை) "நின் பிடரிலே பொருந்தியிருந்த உதயணன் அவ்விடத்தே ஆராய்ந்த நெஞ்சத்தோடே கீழிறங்கி நின்செவி அருகே சேர்ந்து ''பிடிநங்காய் ! நீ இப்பொழுது அஞ்சாதே கொள் ! இறைவனுடைய ஐந்தெழுத்துக்களையும் நினைக !'' என்று செவியறிவுறுத்துதலாலே நீ அம் மந்திரத்தைக் குறையின்றிக் கணிக்கும் தன்மையில் பிறழாமல் அந் நினைவோடு இறந்தது காரணமாக ஊன்மிக்க விலங்கினது உடம்பு அவ்விடத்தே கிடப்ப' என்க.
 
(விளக்கம்) மேயவன் : உதயணன். ஐம்பதம் - பஞ்ச நமஸ்கார மந்திரம். நினைக்கும் சிந்தையொடு என்க. விலங்கின் உடம்பு - யானையுடல். அவண் - அக்காட்டின்கண்.