உரை |
|
5. நரவாண காண்டம் |
|
3. இயக்கன் போனது |
|
ஈனமில்
யாக்கையோ டிவ்வழி வந்துநின்
முன்னைப் பேரொடு பெண்ணுரு வெய்தி
140 இத்துணை வாழ்தியென் றுரைக்கப்
பட்ட அன்ன
தன்மையோ டிறந்த வாயிழை
|
|
(பத்திராபதி
பழைய
உருப்பெற்றுக்
குபேரனையடைந்து வணங்கல்)
138 - 141 :
ஈனம்............ஆயிழை |
|
(பொழிப்புரை) ''நீ
குற்றமற்ற உடம்போடு இவ்வுலகத்தில் வந்து பழைய பெயரோடே பெண்ணுருவமும் எய்தி இவ்வளவு
காலம் வாழ்க என்று அக் குபேரனால் சாபவிடை கூறப்பட்டபடி, யானையாகி இறந்த அப்
பத்திராபதி'' என்க.
|
|
(விளக்கம்) ஈனமில் யாக்கை என்றது தெய்வ உடம்பினை. முன்னைப்
பேர் - பழைய பெயர். அஃதாவது பத்திராபதி என்பதாம். இத்துணை - இவ்வளவு காலம்.
ஆயிழை : பத்திராபதி.
|