(விளக்கம்) அவன் : சௌதருமேந்திரன். அச்சமில்லாமைக்குக்
காரணமான ஆழி என்க. நச்சி - விரும்பி. கச்சம் - ஒருவகைப் பேரளவு. இருடி - துறவி.
எய்திய - எய்த. நிதானம் - உறுதி.
''எண்ணிய வெண்ணியாங் கெய்துப
வெண்ணியார் திண்ணிய ராகப் பெறின்'' (குறள் -
666)
என்பதுபற்றிப் போகம்
செய்த நிதான வகையின் நினைத்திருந்தனன்
என்றான்.
|