பக்கம் எண் :

பக்கம் எண்:978

உரை
 
5. நரவாண காண்டம்
 
  3. இயக்கன் போனது
 
          ஆய வெள்ளத் தவனை யழைத்தே
    190    குறையா விருந்தவக் கிழவனை நோக்கி
          மன்னிய வத்தவன் றேவி வயிற்றுள்
          துன்னினை படுநா ளின்ன தாதலின்
 
        (சௌதருமேந்திரன் சோதவனுக்குக் கட்டளையிடுதல்)
                 189 - 193 : ஆய.......உரைப்ப
 
(பொழிப்புரை) பின்னர் அந்தச் சௌதருமேந்திரன் துறவோர் கூட்டத்தினிதிருந்த அத்துறவியை யழைத்துக் குறைவற்ற பெரிய தவத்திற்கு உரிமை பூண்ட அச்சோதவனை நோக்கி ''ஐய ! நீ நிலைபெற்ற உதயண மன்னனுடைய கோப்பெருந் தேவியாகிய வாசவதத்தையின் வயிற்றினுள்ளே பொருந்தி உருவாகும் நாள் இந்த நாளே யாதலின்..............................நூலையுடைய அச்சௌதருமேந்திரன் கூறி என்க.
 
(விளக்கம்) ஆயவெள்ளம் - துறவோர் கூட்டம். அவன் : சோதவன். தவக்கிழவனை : அச்சோதவனை. தேவி : வாசவதத்தை. இப்பகுதியில் 192ஆம் அடியை யடுத்து ஓரடியும் அதனை யடுத்த அடியில் முதற்சீர் இரண்டும் அழிந்தொழிந்தன.