உரை |
|
5. நரவாண காண்டம் |
|
3. இயக்கன் போனது |
|
220 வருவல் யானென வொருபதங்
கொடுத்துக்
குறிகொண் மாற்றங் கொள்ளக்
கூறிச் சென்றியான்
வருவல் செம்மல்
போற்றெனக் குன்றா
நன்மொழி யொன்றல பயிற்றிக்
|
|
(இயக்கன் உதயணனுக்கு
ஒரு மந்திரம்
அறிவுறுத்தல்)
220 - 223 : ஒருபதம்............பயிற்றி
|
|
(பொழிப்புரை) அவ்வுதயணனுக்கு
ஒரு மந்திரத்தை அறிவுறுத்து அவன் குறிக்கோளாகக் கொள்ளவேண்டிய செய்திகளையும் அவன்
மனங்கொள்ளும்படி கூறிச் செம்மால் ! யான் கூறியதனை நன்கு பேணிச் செய்வாயாக. யான்
சென்றுவருவேன் என்று கூறிக் குறையாத நல்ல மொழிகள் பலவற்றையும் பன்முறையும் கூறி
என்க.
|
|
(விளக்கம்) ஒருபதம் - மந்திரம். செம்மல் : விளி. பயிற்றி -
பலகாலும் சொல்லி.
|