(பொழிப்புரை) மணங்கமழ்கின்ற மார்பினையுடையோய் ! கவலாதே கொள் என்று கூறி வீரவளையணிந்த
தன் பெரிய கைகளாலே ஆருயிர்த் தோழனாகிய, உதயணனைத் தழுவிக் கொண்டு விடைகொண்டு
வானின்கண் தனது பசிய பொன்னாலியன்ற பல்வேறு அணிகலன்களும் பிறழ்ந்து பன்முறையும் ஒளி
வீசாநிற்ப, மின்னல் போன்று விரைந்து விண்ணினூடே மறைந்து போனான்
என்க.
(விளக்கம்) கடி - மணம். கவலல் - கவலைப்படாதே. தொடி -
வீரவளை. பல்லூழ் - பன்முறையும். விரைந்து மறைந்தனன் என
மாறுக.