பக்கம் எண் :

பக்கம் எண்:992

உரை
 
5. நரவாண காண்டம்
 
  4. வயாத் தீர்ந்தது
 
            நிறையுடன் கொண்டோர் மறைவிடங் குறுகிச்
            சின்னாள் கழிந்த பின்னா ளெல்லையுள்
     50     அமைவுநனி காண்கென் றாங்கவ னுரைப்ப
 
          (பத்திராபதி வான ஊர்தியமைத்துக் கொடுத்தல்)
                 48 - 50 : நிறை.........உரைப்ப
 
(பொழிப்புரை) அப் பொருள்களை அளவுடன் பெற்றுக் கொண்டு அவ் விளந்தச்சன் ஒரு மறைவான இடத்தையணுகி ஒருசில நாள் கழிந்த பின்னர் ஒருநாள் அரசவைக்கண் வந்து, ''வேந்தே! யான் இயற்றியுள்ள வான ஊர்தியின் அமைப்பினை நன்கு கண்டருளுக'' என்று கூறுதலாலே என்க.
 
(விளக்கம்) நிறை - அளவு. மன நிறைவுமாம். பொருள்களைப் பெற்றுக்கொண்டு எந்திரம் அமைப்பான்போல மறைவிடத்திலே புகுந்து சிலநாள் கழித்த பின்னர் என்றவாறு. அமைவு - அமைப்பு. அவன் : பத்திராபதியாகிய அவ்விளந்தச்சன். உதயணனுக்குரைப்ப என்க.